Wednesday, December 11, 2013

கொழும்பில் பயங்கரவாத செயலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினருக்கு கடூழிய சிறை!

Wednesday, December 11, 2013
இலங்கை::புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் தங்குமிடவசதியை தேடிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை வி

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியான பிரித் பத்மன் சுரசேன என்பவரே இவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

புலிகள் இயக்கத்தலைவர் ஒருவருடன் இணைந்து கொழும்பில் பயங்கரவாத செயலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக புலிகளின் இயக்க உறுப்பினர் என்று கூறப்படும் மகேஷ் கிறிஸ்தோபர் விஜேந்திரன் என்பருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றமே மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் வாசித்து காட்டப்பட்டன. குற்றப்பத்திரிகையிலிருந்த அந்த குற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்தே அவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
தித்து தீர்ப்பளித்தது.
 
 


No comments:

Post a Comment