Monday, December 16, 2013

யாழ் புகையிரத நிலையம் 140 மில்லியனில் புனரமைப்பு!

Monday, December 16, 2013
இலங்கை::இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கு ரயில் சேவைக்கான புனரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றது.

இந்த வகையில் தற்போது யாழ் புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

140 மில்லியன் ரூபா செலவில் யாழ் புகையிரத நிலையப் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடபகுதிக்கான புகையிரதச் சேவைகள் முற்றாக செயழிந்துள்ள நிலையில் தற்போது இந்திய அரசாங்கத்தின் 1500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த புகையிரதப் பாதை புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண புகையிர நிலையத்தின் மேல்த்தளம் முற்றாக இடிக்கப்பட்டு புதிய மேல்த்தளம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் புகையிரத நிலைய உள்ளக வீதிகள் மற்றும் கீழ் தளம் என்பன நவீன முறையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment