Pages

Monday, November 4, 2013

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றுவதற்காக, மேலும் ஒரு தொகுதியினர் பணியில்: சந்திரரத்ன பல்லேகம!

Monday, November 04, 2013
இலங்கை::சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றுவதற்காக, மேலும் ஒரு தொகுதியினர் பணியில் இணைத்து கொள்ளப்படவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்
சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
 
சிறைச்சாலைகள் திணைக்கத்தின் பணிகளுக்கு 194 அதிகாரிகள் இணைத்து கொள்ளப்படவுள்ளதுடன் இவர்களில் 30 பேர் புலனாய்வுப் பிரிவுக்காக இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
 
இவர்களில் குறைந்த தலா 5 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பணிகளில் அமர்த்தப்பட உள்ளனர்.
சிறைச்சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்துவது கட்டாயமானது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.

No comments:

Post a Comment