Tuesday,15, October, 2013
இலங்கை::தெற்கு கடற்பரப்பில் 18 நாட்களாக நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 06 மீனவர்கள் கடற்படையினரின்சமுத்திர கப்பலால் காப்பாற்றப்பட்டு தங்காலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
தங்காலையில் இருந்து 84 கடல்மைல் தொலைவில் இந்த மீனவர்கள் பயணித்த படகு தொழில்நுட்ப கோளாறினால் செயலிழந்ததால் அவர்கள் நிர்க்கதிக்குள்ளானார்கள்.
கடற்றொழில் திணைக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment