Pages

Tuesday, October 8, 2013

13 ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் ; ரவூப் சல்மானிடம் வேண்டுகோள்!

Tuesday, October 08, 2013
இலங்கை::இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்.
 
இந்த சந்திப்பின் பின்னர் ஊட­கங்­­க­ளுக்கு கருத்து வெளியிட்டடுள்ள அமைச்சர் ரவூப் ஹக்­கீம், 13 ஆவது திருத்தச் சட்­டம், அதி­காரப் பர­வ­லாக்கல்,  இந்­திய வீட­மைப்புத் திட்­­டம், உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சல்மான் குர்­ஷித்­துடன் விரி­வாக கலந்­து­யா­டி­ய­தாக 13ஆவது திருத்தச் சட்­ட­மூ­லத்தைப் பாது­காப்­ப­தற்கு இந்­திய அர­சாங்கம் அழுத்தம் கொடுப்­பதன் மூலம் இந்­நாட்டில் சிறு­பான்­மை­யினர் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் அதி­காரம் பகி­ரப்­ப­டு­வ­தற்கு உதவி புரிய வேண்டும்.
 
சிறு­பான்­மை­யி­னரின் உணர்­வுகள் மதிக்­கப்­பட வேண்­டும் வட மாகா­ணத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் அக­தி­களின் மீள்­கு­டி­யேற்றம் இந்­திய வீட­மைப்புத் திட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கான பகிர்வு, அதி­கா­ரப்­ப­கிர்வு உட்­பட பல விட­யங்கள் பற்றி கலந்­து­பே­சினோம்.
 
கட்­சியின் அர­சியல் நிலைப்­பாடு கொள்­கைகள் என்­பன விளக்­கப்­பட்­டன. சந்­திப்பு மிகவும் சாத­க­மாக அமைந்­தது. மற்றும் கடந்த மாகாண சபைத் தேர்­தலில் கட்சி அடைந்­துள்ள வெற்றி என்­பன எடுத்து விளக்­கப்­பட்­டன. மாகாண சபை­களின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட கூடடாது என்ற எமது நிலைப்­பாட்­டி­னையும் தெரி­வித்தோம்.
 
இந்­திய வீட­மைப்புத் திட்­டத்தில் சில மாவட்­டங்கள் விடு­பட்­டுள்­ள­தையும், அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தையும் கூறினோம். இந்­திய வீட­மைப்­புத்­திட்டம் வட மாகா­ணத்தில் அர­சியல் பாகு­பா­டின்றி முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்றும் வேண்­டிக்­கொண்டோம் என  ஸ்ரீலங்கா காங்­கிரஸ் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
இந்திய வெவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய – இலங்கை நட்புறவு தொடர்ந்தும் பேணப்படும். முஸ்லிம் காங்கிரஸுடன் மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்­டலில் இன்­றி­ரவு 8 மணி­ய­ளவில் இடம்­பெற்ற  இச்­சந்­திப்பில் நீதி­ய­மைச்­சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலை­வ­ருமான ரவூப் ஹக்­கீம், அக் கட்சியின் செய­லாளர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­ ஹசன் அலி மேலும் முஸ்லிம் காங்கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பைசால் காசிம், ஹரீஸ், தௌபீக், அஸ்­லம், முத்­தலிப் பாவா பாரூக் , பிரதிப் பொதுச் செய­லா­ளரும் கல்­முனை மாந­கர சபை பிரதி மேய­ரு­மான சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்பர் ஆகி­யோரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment