Pages

Thursday, September 19, 2013

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லை: கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்!

Thursday, September 19, 2013
இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பெறவில்லையெனவும் இது தொடர்பாக முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லையொனவும்
கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கடமைகளில் மாவட்டத்தில் 32 நடமாடும் பொலிஸ் சேவை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 
நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள தேர்தல் பிரசாரப் பணிகளில் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லையென்றும் இத்துடன் முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லையெனவும் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, எந்நேரமும் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியவாறு தொலைபேசி செயற்பாடுகளும் 24மணிநேரமும் செயற்பட்டுக்கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment