Sunday, September 15, 2013

சர்வதேச கண்காணிப்பாளர்கள் வட மாகாணத்தை கண்காணிப்பதற்காக இன்று அப்பகுதிக்கு செல்லவுள்ளது: பெஃரல்!

Sunday, September 15, 2013
இலங்கை::சர்வதேச கண்காணிப்பாளர்கள் வட மாகாணத்தை கண்காணிப்பதற்காக இன்று அப்பகுதிக்கு செல்லவுள்ளதாக பெஃரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி தெரி்வித்துள்ளார்.
 
ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையத்தின் 8 கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜப்பான், தாய்லாந்து, இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இதில் அடங்குவதாக  நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுவரையில் தமது அமைப்பிற்கு 430 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பெஃரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

No comments:

Post a Comment