Pages

Wednesday, August 14, 2013

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Wednesday, August 14, 2013
ஸ்ரீநகர்::ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான், இந்திய வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்றது. இதனையடுத்து எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், எல்லையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று குப்புவாரா மாவட்ட கெரன் செக்டர் வழியாக இந்திய பகுதிக்குள் இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
இதை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற அந்த இரண்டு தீவிரவாதிகளும் இந்திய ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment