Sunday, June 16, 2013

புலிகள் இயக்கம் தொடர்பில் அவதானமாக இருக்கமாறு, இலங்கை அரசாங்கம்: ஜேர்மனி அரசாங்கத்தை கோரியுள்ளது!

Sunday, June 16, 2013
இலங்கை::புலிகள் இயக்கம் தொடர்பில் அவதானமாக இருக்கமாறு, இலங்கை அரசாங்கம் ஜேர்மனி அரசாங்கத்தை கோரியுள்ளது.

ஜேர்மனிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கயிடோ வெஸ்டர்விலேவை சந்தித்த போது, இந்த விடயம் குறித்து அறிவுறுத்தி இருப்பதாக ஜேர்மனிய ஊடகம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியில்   புலிகளுக்கு சொந்தமான பல பாடசாலைகள் இயங்கி வருகின்றமை தொடர்பிலும் அவர்களுக்கு இடையில் பேசப்பட்டுள்ளது.

புலிகளின் செயற்பாடுகள் ஜேர்மனியில் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொண்ட அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர், பல்வேறு ஒழுங்கமைப்புகளின் உதவிகளுடன், சில முன்னணி   புலி செயற்பாட்டாளர்கள் அங்கு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment