Pages

Friday, May 10, 2013

அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது: வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Friday, May 10, 2013
இலங்கை::அமெரிக்காவின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக சில நாடுகள் இலங்கையை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக சில நாடுகள் வாக்களித்ததாகவும், அவை வேறும் உள்நோக்கங்களுக்காக இவ்வாறு வாக்களித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இலங்கையின் நிலைமைகளை கருத்திற் கொண்டு குறித்த நாடுகள் வாக்களிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அமெரிக்காவிடமிருந்து பல விடயங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment