Pages

Sunday, May 26, 2013

ஆவடி தொழிலதிபர் கொலை:கூலிப்படையாக செயல்பட்ட இலங்கை வாலிபருக்கு வலை!

Sunday, May 26, 2013
சென்னை::அம்பத்தூர் தொழில் அதிபர் கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த வாலிபரை பிடிக்க 5 தனிப்படை விரைந்தது.
அம்பத்தூர் மேற்கு பானுநகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (44). திருமுல்லைவாயல் பகுதியில் கேபிள் டிவி, இரிடியம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மனைவி மனோன்மணி (40). இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 13ம் தேதி ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார்.

அம்பத்தூர் இன்ஸ் பெக்டர் மில்லர் பொன் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதில், ஸ்ரீதரை கொலை செய்தது அவரது மனைவி மனோன்மணி, இவரது தந்தை நாகரத்தினம், தம்பி ராஜா (39) ஆகியோர்தான் என்று தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய் தனர். விசாரணையில், இரிடி யம் தொழில் செய்ய மனைவியின் நகைகள் மற்றும் மாமனாரிடம் 5 லட்சம் வாங்கியுள்ளார். தொழிலில் நஷ்டம் அடைந்ததால் குடும் பத்தில் பிரச்னை ஏற்பட்டது. மேலும், கேபிள் டிவி வருமானத்தில் வந்த பணத்தை கோவை யில் உள்ள கள்ளக்காதலி மைதிலிக்கு செலவு செய் துள்ளார். இதனால் ஸ்ரீத ரை கொலை செய்து ள்ளனர் என தெரிந்தது.

இதற்கிடையே, ஸ்ரீதர் கொலைக்கு கூலிப் படையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த ரியான் என்ற சுதாகர் (38) என்பவர் தலைமறைவா கிவிட்டார். அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படையினர் வேதா ரண்யம், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி பகுதிகளுக்கு விரைந் துள்ளனர். மேலும், சுதாகர் பற்றி தகவல் தெரிந்தால் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக் கலாம். அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment