Pages

Monday, March 4, 2013

இலங்கையில் யதாத்தமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் - பான் கீ மூன்!

Monday, March 04, 2013
UN::இலங்கையில் யதார்த்தமான நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கி நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான முக்கியத்துவத்தை இலங்கை முழுமையாக புரிந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். யதார்த்தமானதும், முழுமையானதுமான தேசிய நல்லிணக்கன முனைப்புக்கள் மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா பிரதிநிதிகள் ஊடாக, யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளங்கிக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன குறித்த அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் இலங்கை அசராங்கம் சர்வதேச சமூகத்துடன் ஆரோக்கியமான உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment