Pages

Wednesday, March 13, 2013

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள தேசிய செயல்பாட்டு திட்டத்தில் உள்ளடக்கப்படாத பரிந்துரைகளையும் எதிர்காலத்தில் அமுலாக்க வேண்டும் - ஜப்பான்!

Wednesday, March 13, 2013
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள தேசிய செயல்பாட்டு திட்டத்தில் உள்ளடக்கப்படாத பரிந்துரைகளையும் எதிர்காலத்தில் அமுலாக்க வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய ஜப்பானிய தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை ஜப்பான் வரவேற்கிறது.

எனினும் இதில் நல்லிணக்க பரிந்துரைகளின் குறிப்பிட்ட சில பரிந்துரைகள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆரணக்குழுவின் ஏனைய பரிந்துரைகளையும் அமுலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாடுகளில் மட்டுப்படுத்தபட்ட முன்னேற்றத்தையே காணக்கூடியதாக இருப்பதாக ரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment