Tuesday, March 05, 2013
இலங்கை::சர்வதேச சமூகத்தை விடவும் உள்நாட்டு அமைப்புக்களே நாட்டுக்கு எதிராக அதிகம் செயற்படுவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய இவ்வாறு சில உள்நாட்டு அமைப்புக்கள், இலங்கைக் எதிராக செயற்படுகின்றன.
அரசாங்கம் என்ற ரீதியில் மனித உரிமைகளை மேம்படுத்த எவ்வளவு முயற்சி எடுத்தாலும், சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக மனித உரிமை மீறல் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
சனல்-4 ஊடகத்தின் ஊடாக இல்லாதவற்றை உருவாக்கி போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment