Pages

Friday, March 1, 2013

புலி பினாமிகளால் தயாரிக்கப்பட்ட:செனல் போ தொலைகாட்சி தயாரித்துள்ள 'நோ பயசோன்" என்ற ஆவணப் படம் மனித உரிமைகள் மாநாட்டில்!

Friday, March 01, 2013
 ஜெனிவா::புலி பினாமிகளால் தயாரிக்கப்பட்ட செனல் போ தொலைகாட்சி தயாரித்துள்ள 'நோ பயசோன்" என்ற ஆவணப் படம் மனித உரிமைகள் மாநாட்டில் ஒளிபரப்ப தடைவிதிக்க வேண்டும் என்று இலங்கை விடுத்த கோரிக்கைக்கு மனித உரிமைகள் சபை பதிலளித்துள்ளது.

மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் ரெமிகியுஸ் ஏ ஹென்சல், குறித்த வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டாலும் அது உத்தியோக பூர்வமானதாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குறித்த 'நோ பயசோன்" ஆவணப்படம் இன்று மனித உரிமைகள் மாநாட்டில் காட்சிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு தற்சமயம் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் குழுவொன்று இன்று ஜெனிவா செல்கின்றது.

No comments:

Post a Comment