Friday, February 22, 2013
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
யதாதர்த்தமானதும், தேசிய ரீதியானதுமான பொறிமுறைமை ஒன்றின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் குறித்த முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேணடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பிரித்தானியாவின் சனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி குறித்து பான் கீ மூன் அறிந்து கொண்டுள்ளதாக, அவரது பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், குறித்த வீடியோ காட்சி தொடர்பில் எவ்வித கருத்துக்களும் தற்போதைக்கு வெளியிடப்ப போவதில்லை என அவர் குறப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை யுத்தம் தொடர்பில் இறுதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையானது, ஐக்கிய நாடுகள் அமைப்பை மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment