Pages

Wednesday, October 31, 2012

துபாய் ஷாப்பிங் மாலில் ஜட்டி ஆசாமி கைது!

Wednesday, October 31, 2012
துபாய்::துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து ஷாப்பிங் செய்ய வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஷாப்பிங் செய்வதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது வெறும் ஜட்டி, ஷூ மட்டும் அணிந்து கொண்டு அங்கும் இங்கும் திரிந்து 20 வயது வாலிபர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்.

பெண்கள் அவரை பார்த்து முகம் சுளித்தபடி சென்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் ஓடோடி சென்று வாலிபரை மடக்கினர். அவர் போதையில் இல்லை என்பது தெரிந்தது. ‘ஜாலிக்காக இப்படி வந்தேன்’ என்று கூறிய அவரை கைது செய்தனர். ‘பொது இடங்களில் இதுபோன்ற செய்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜாலிக்காக யாராவது இப்படி செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment