Pages

Wednesday, October 31, 2012

சூறாவளி காற்றுடன் பலத்த மழை 45 கிராமங்கள் இருளில் மூழ்கின!

Wednesday, October 31, 2012
ஏற்காடு::ஏற்காட்டில் இரவு 1 மணி முதல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டதால், 45 கிராமங்கள் இருளில் மூழ்கின. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிலம்’ புயல் இன்று மாலை கல்பாக்கம் அருகே கரையை கடக்கிறது. அப்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மதியம் முதல் மழை பெய்து வந்தது.

இன்று அதிகாலை 2 மணி முதல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே நேரத்தில், ஏற்காடு பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டதால், 45 கிராமங்கள் இருளில் மூழ்கின. மழை காரணமாக, கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராதபடி முடங்கி கிடக்கின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. டவுன் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்காடு முழுவதும் இருட்டாக காணப்படுவதால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் காபி எஸ்டேட்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment