Pages

Wednesday, October 31, 2012

அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் பகுதியில் மோட்டார்குண்டு ஒன்று வெடித்ததில் 14 வயது சிறுவன் காயம்!

Wednesday, October 31, 2012
இலங்கை::அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் பகுதியில் மோட்டார்குண்டு ஒன்று வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாமயடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில், ரவிக்குமார் கௌரிகரன் என்ற பாடசாலை மாணவனே காயடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
மேற்படி சிறுவன், கண்ணகிபுரம் பகுதியில் மூடப்பட்ட விசேட அதிரடிப்படை முகாம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்தில் போத்தல் ஒன்று கிடப்பதை கண்ட அச்சிறுவன் அதனை எடுத்து எறிவதற்கு முயற்சித்துள்ளார். அதன்போதே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. 
போத்தலில் அடைக்கப்பட்ட நிலையிலிருந்த டொம்பா 4 ரக மோட்டார் குண்டே இதன்போது வெடித்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்கரைப்பற்று காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment