Pages

Sunday, September 30, 2012

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க இந்தியா முயற்சித்து வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது!

Sunday, September 30, 2012
இலங்கை::யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க இந்தியா முயற்சித்து வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்திய ஊடகங்கள் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், ஜனாதிபதியின் முயற்சியை கடந்த கால முயற்சிகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 களில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியாவே பயிற்சி அளித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

2009ம் ஆண்டு வன்னி யுத்த முன்நகர்வுகளை தடுத்து நிறுத்த இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் முயற்சி செய்ததாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரபாகரனோ, பொட்டு அம்மானோ அல்லது சூசையோ உயிருடன் இருந்திருந்தால் சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து கவனம் செலுத்தியிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் எப்போது தேர்தல் நடத்த வேண்டும் என்பது பற்றி இந்திய ஊடகங்களின் ஆலோசனை அவசியமற்றது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் இலங்கை விவகாரம் தொடர்பில் தி ஹிந்து உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment