Pages

Sunday, September 30, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நாளைய தினம் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவை சந்திக்கும்!

Sunday, September 30, 2012
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நாளைய தினம் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றோர் கலந்துக் கொள்வர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இந்திய விஜயத்தின் போது, மேற்கொள்ளவுள்ள சந்திப்புகள் தொடர்பிலும், இந்தியாவிடம் முன்வைக்கவுள்ள யோசனைகள் தொடர்பிலும் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுகள் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் போன்றோரை சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டீருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment