Pages

Sunday, September 30, 2012

யுத்த இடம்பெயர் மக்கள் யாரும் கிடையாது - பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Sunday, September 30, 2012
இலங்கை::யுத்த இடம்பெயர் மக்கள் யாரும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

200க்கும் குறைந்த  புலிகளின் முன்னாள் போராளிகளே தற்போது புனர்வாழ்வு பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலிபோராளிகளின் குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

80 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வலயங்களில் 6000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 7000 வீடுகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ளாது நேரடியாக வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment