Pages

Saturday, September 29, 2012

3,40 கோடி வேட்டி - சேலைகள் பொங்கலின்போது வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு!

Saturday, September 29, 2012
சென்னை::தமிழர் திருநாளாம் பொங்கலின்போது 3 கோடியே 40 லட்சம் வேட்டிகள், சேலைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகளின் தற்போதைய உற்பத்தி நிலவரம் மற்றும் விநியோகம் குறித்து நேற்று (28.9.12) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 இந்தக் கூட்டத்தின் முடிவில், நடப்பாண்டில் விநியோகம் செய்யப்பட வேண்டிய வேட்டிகள் மற்றும் சேலைகளை 15.10.12-க்குள் வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்க வேண்டிய 1 கோடியே 70 லட்சம் விலையில்லா வேட்டிகள் மற்றும் 1 கோடியே 70 லட்சம் விலையில்லா சேலைகள், என மொத்தம் 3 கோடியே 40 லட்சம் விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகளை வழங்கும் பணி 1.1.2013 அன்று ஆரம்பிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை நாட்களுக்குள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment