Pages

Thursday, August 23, 2012

காணாமற்போன துப்பாக்கியை மீட்ட பொலிஸார்!

Thursday, August 23, 2012
இலங்கை::தம்புள்ளை நீதிமன்றத்தின் வழக்குகளுடன் தொடர்புடைய பொருட்கள் வைக்கப்படும் அறையிலிருந்து காணாமற்போன துப்பாக்கியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தம்புள்ளை நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி தம்புள்ளை நீதிமன்றத்தின் வழக்குகளுடன் தொடர்புடைய பொருட்கள் வைக்கப்படும் அறையிலிருந்து திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments:

Post a Comment