Pages

Thursday, August 23, 2012

பாணந்துறை கடலில் முழுமையாக மூழ்கிய சைப்ரஸ் கப்பல்!

Thursday, August 23, 2012
இலங்கை::பாணந்துறை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

இந்த கப்பல் பாணந்துறைக்கு மூன்று கடல்மைல்கள் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக வர்த்தக கப்பல் பணிப்பாளர் அஜித் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சைப்ரஸுக்கு சொந்தமான இந்த கப்பலில் பொருட்கள் விநியோகம் தொடர்பில் ஏற்பட்டிருந்த சர்ச்சை காரணமாக 2007ஆம் ஆண்டில் வர்த்தக மேல் நீதிமன்றத்தால் கப்பலை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

சமுத்திரம் மாசடையக் கூடும் என்ற காரணத்தினால் அதிலிருந்த 207 தொன் எரிபொருள் அகற்றப்பட்டதாக வர்த்தக கப்பல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் கப்பலின் தாங்கியில் 10 அல்லது 20 தொன் எரிபொருள் மீதம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment