Pages

Thursday, July 26, 2012

நீதிமன்றில் ஆஜராகவும்; அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவு!

Thursday, July 26, 2012
இலங்கை::அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கொன்றின் தீர்ப்பு குறித்து மன்னார் நீதவானுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாம் ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணங்களை அன்றையதினம் முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட ஏழு சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த பின்னர், இன்று முற்பகல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்களுக்கு அல்லது அவர்களின் உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு ஏதேனும் விதத்தில் அழுத்தம் கொடுக்கப்படுமாயின், சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என இந்த உத்தரவைப் பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.எல்.ரஞ்சித் சில்வா குறிப்பிட்டார்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பிரசன்னமாகியிருந்தார்.

நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற சுயாதீன தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரர்கள் சட்டத்தரணிகள் என்ற ரீதியில் மன்னார் சம்பவத்தைக் கண்டிப்பதாகவும் ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் கூறினார்.

No comments:

Post a Comment