Pages

Thursday, July 5, 2012

உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியின் பிரேத பரிசோதனை இன்று!

Thursday, July 05, 2012
இலங்கை::ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் சிறைக்கைதியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதியொருவர் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

கருணாகரன் நிர்மலரூபன் என்ற 22 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கடந்த மாதம் 29ஆம் திகதி மகர சிறைச்சாலைக்கு இந்த கைதி மாற்றப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து ராகமை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதிசெய்ய முடியுமென அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment