Pages

Saturday, July 7, 2012

நாட்டை பிரிக்க முனைகின்றனர் -

Saturday, July 07, 2012
இலங்கை::வடக்கு மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் நாட்டை மீண்டும் பிரிப்பதற்கு முனைபவர்களே என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பியசிறி விஜேநாயக இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு தேர்தலை இவ்வாறு விரைவாக நடத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது ரணில் விக்ரமசிங்க வடக்கில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோருகிறார்.

இவ்வாறு விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவது மூலம் மீண்டும் நாட்டில் பிரிவினை வாதத்தை தேற்றுவிப்பதாகும்.

வடக்கு மாகாண சபை தேர்தலின் ஊடாக மறைந்திருக்கும் பிரிவினைவாதிகளை ஒன்றிணைக்க முனைவார்களானால் அதனை ஒருபோதும் ஏற்க முடியாது.

இந்த அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. இந்த நிலையில் வீணே கையை சுட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான பியசிறி விஜேநாயக இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment