Pages

Saturday, July 7, 2012

இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 180 ஏக்கர் காணி பொதுமக்கள் வசம்!

Saturday, July 07, 2012
இலங்கை::யுத்தம் இடம்பெற்றபோது வவுனியாவில் தற்காலிகமாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அங்கு வீடமைப்பு பணிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த சுமார் 180 ஏக்கர் காணி தற்போது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தாண்டிக்குளம், ஓமந்தை உள்ளிட் சில பகுதிகளில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் தற்போது வீடுகள் அமைக்கப்பட்டு வருவதுடன் சிறு கைத்தொழில்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமது சொந்தக் காணிகள் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment