



Friday, June, 15, 2012இலங்கை::உலகளாவிய ரீதியில் இசை ரசிகர்களைக் கவர்ந்த இந்தியாவின் பிரபல பாடகர் உதித் நாராயண் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தார்.
சிரச ரி.வி யின் 14ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
உதித் நாராயண் உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 5.25 அளவில் கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடும் திறமையைக் கொண்ட உதித் நாராயண் பங்குபற்றும் இசை நிகழ்ச்சி நாளை இரவு 7 மணிக்கு சீ.எச் அன்ட் எப்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment