Pages

Tuesday, June 19, 2012

குருநாகல் - வெல்லவ பகுதியில் ரயிலில் பாய்ந்து இருவர் தற்கொலை!

Tuesday, June, 19, 2012
இலங்கை::குருநாகல் - வெல்லவ பகுதியில் ரயிலில் பாய்ந்து இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும், இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

43 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க திருமணமான இருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment