Pages

Monday, June 18, 2012

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 19கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன!


Monday, June 18, 2012
இலங்கை::இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 19 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் தவிர 30 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் 15 சிம் அட்டைகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் அமைச்சர் கூறினார்.

நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 33 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடையின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13 பொலிஸ் நிலையங்கள் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment