Pages

Wednesday, May 30, 2012

கவர்ச்சி உடைகள் மீது மோகம் : இத்தாலியில் மனைவியை கொன்ற இந்தியர் கைது!

Wednesday,May,30,2012
ரோம்:இத்தாலியின் பசேலிகோட்யூஸ் வில்வேஜ் பகுதியை சேர்ந்தவர் சின்ஜ் குல்பிர் (37). இந்தியரான இவர் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குல்பீரின் மனைவி கவுர் பல்விந்தே (27). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். தற்போது கவுர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுர் திடீரென மாயமானார். கவுரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். குல்பிரிடம் கேட்டபோது, தன்னுடன் வாழ பிடிக்காமல் கவுர் சென்றுவிட்டதாக கூறினார். இந்நிலையில், கவுரின் சடலம் அப்பகுதியில் உள்ள நதிக்கரையோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் சடலத்தை கைபற்றி விசாரணை நடத்தினர். அதில் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘என் மனைவி கவுருக்கு இந்திய பாரம்பரிய ஆடைகள் பிடிக்கவில்லை. அவர் கவர்ச்சியான மேற்கத்திய பாணி உடைகளையே அணிந்தார். அது எனக்கு பிடிக்காததால் பலமுறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பிடிவாதமாக கவர்ச்சி ஆடைகளையே அணிந்து வந்தார். இது என் கோபத்தை அதிகரித்தது. அதனால் அவரைக் கொலை செய்தேன்‘ என்று குல்பீர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment