Tuesday, April 10, 2012இலங்கை::காணாமல் போனதாகக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் திமுது ஆட்டிகல சற்று நேரத்திற்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டுள்ளார்.
மாதிவலையிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் புபுது ஜயகொட கருத்து தெரிவிக்கையில், திமுது ஆட்டிகல அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகவும் சிறிது நேரத்தின் பின்னர் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிப்பார் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment