Pages

Thursday, April 26, 2012

இலங்கையில் புலிகள் செய்த கொலைகள் பற்றி வாய்திறக்காத (புலி ஆதரவு கோமாளிகள்) துரோகிகளின் அறிக்கை!ஈழம் பற்றி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை (புலி)வைகோ!

Thursday, April, 26, 2012
இலங்கை::இலங்கையில் புலிகள் செய்த கொலைகள் பற்றி வாய்திறக்காத (புலி ஆதரவு கோமாளிகள்) துரோகிகளின் அறிக்கை!ஈழம் பற்றி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை (புலி)வைகோ!

தனி ஈழம் குறித்துப் பேச திமுக தலைவர் கருணாநிதிக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலர் (புலி ஆதரவு கோமாளி)வைகோ பேசினார்.

தருமபுரியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியது:

ஈழத்தில் தமிழர்களை அழிக்க அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உதவி செய்தது. மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதற்குத் துணைபோயின. இலங்கைக்கு ஆயுத உதவி செய்தபோதோ, படுகொலைகள் அரங்கேறியபோதோ அவற்றைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்காமல் மௌனம் காத்தார் கருணாநிதி.

ஆனால், இப்போது தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார். தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரரறிவாளன், முருகன், சாந்தன் தொடர்பான வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதை எதிர்த்து வாதிட்டுள்ளோம். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார் (புலி ஆதரவு கோமாளி) வைகோ.

No comments:

Post a Comment