Pages

Tuesday, February 28, 2012

கோவில்பட்டியில் பரபரப்பு கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படம் எடுத்த பேராசிரியர் : லேப்டாப்பை கைப்பற்றி போலீஸ் விசாரணை!

Tuesday, February 28, 2012
கோவில்பட்டி::கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து 3 ஆண்டாக சீரழித்த பேராசிரியரின் லேப்டாப் போலீசாரிடம் சிக்கியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச்சேர்ந்தவர் தருண்(28). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த பெண் (18), சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது மாணவி, தருணிடம் டியூஷனுக்கு சென்று வந்தார். அப்போது தருண், மாணவியை தன்வசப்படுத்தினார். இந்நிலையில் ஒரு நாள் டியூஷன் சென்ற மாணவிக்கு, தருண் கூல் டிரிங்ஸ் கொடுத்தார். அதை குடித்ததும் சிறிது நேரத்தில் அவர் மயங்கி சரிந்தார். உடனே அந்த மாணவியை தருண் பலாத்காரம் செய்ததோடு தனது செல்போன் கேமராவில் அதை பதிவும் செய்தார். பேராசிரியர் தன்னிடம் தவறாக நடந்துள்ளது தெரியவந்ததும் மாணவி டியூஷனுக்கு வருவதை நிறுத்தினார். ஆனால் தருண், மாணவியின் ஆபாச படங்களை காட்டி அவரை மிரட்டியதோடு தொடர்ந்து அவரை அனுபவித்து வந்துள்ளார்.

மேலும், மாணவியை மிரட்டி தனது நண்பர்கள் சிலருக்கும் பணிய வைத்துள்ளார். அதையும் செல்போன் கேமராவில் படம் பிடித்து வைத்துக்கொண்டார். இந்த விஷயம் மாணவியின் உறவினர் ஒருவருக்கு தெரியவந்தது. அவர், தருணிடம் தகராறு செய்து மாணவி மற்றும் நண்பர்கள் படங்களை பதிவுசெய்து வைத்திருந்த லேப்டாப்பை பிடுங்கிக்கொண்டு வந்துவிட்டார். வீட்டில் சென்று அந்த லேப்டாப்பை அந்த நண்பர் போட்டு பார்த்தபோது அதில் மாணவியுடன் பேராசிரியர் இருக்கும் அந்தரங்க படங்கள் 3 மணிநேரம் ஓடியது தெரியவந்தது. மாணவியின் வீட்டிலும் இது தெரியவரவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 3 ஆண்டாக மாணவியை சீரழித்த படங்கள் அடங்கிய லேப்டாப் தற்போது கோவில்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment