Pages

Thursday, February 2, 2012

கிழக்கு மாகாணத்திற்கோர் கீதம்!!

Thursday, February 02, 2012
இலங்கை::கிழக்கு மாகாணத்திற்கு என தனியான மாகாண சபை கீதமொன்றை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில், மாகாண சபை கீதத்தை உருவாக்குவதற்கு கிழக்கு மாகாண சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண சபையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஆர்வமுடையவர்களிடம் இருந்து அதற்கான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுவதாக மாகாண பேரவை செயலகத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

கீதம் இயற்றுவதில் ஆர்வமுடைய கலைஞர்கள் தமது ஆக்கங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிழக்கு மாகாண பேரவை செயலகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment