Pages

Wednesday, February 1, 2012

சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாட்டு அனுப்பியவர்கள் கைது!

Wednesday,February,01,2012
இலங்கை::சட்டவிரோதமாக ஆட்களை மலேஷியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு தம்பதியினர் உள்ளிட்ட மூவர் மாத்தளை திக்கிரியாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மாத்தளை பிரிவில் தீர்வு காணப்படாத குற்றச்செயல்களை விசாரிக்கும் பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரிடமிருந்து நான்கு கடவுச் சீட்டுக்களுடன் 128,000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தம்பதியினருக்கு ஒத்தாசை புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான மூவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment