Saturday, February 11, 2012

இலங்கைக்கு எதிராக பிரித்தானியாவில் புலிகளினால் முன்வைக்கப்பட்ட இணையமகஜருக்கு எதிர்பார்த்தளவு ஆதரவு கிடைக்கப் பெறவில்லை-அரசாங்கம்!

Saturday, February 11, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக பிரித்தானியாவில் புலிகளினால் முன்வைக்கப்பட்ட இணையமகஜருக்கு எதிர்பார்த்தளவு ஆதரவு கிடைக்கப் பெறவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் இதுதொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் மகஜரில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மகஜர் இணையத்தில்பிரசூரிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் 3430 பேர் மட்டுமே கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த மகஜர் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்நடத்தப்பட வேண்டுமாயின் 100,000 கையொப்பங்கள் திரட்டப்பட வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்றதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(LTTE SUPPORTERS) டொக்டர் அருண் சிவானந்தன் என்பவரினால் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்24ம் திகதி இந்த மஜகர் உருவாக்கப்பட்டது.

No comments:

Post a Comment