Pages

Wednesday, February 1, 2012

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை!

Wednesday,February,01,2012
புதுடெல்லி::இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பானஉயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளினதும் பாதுகாப்புச் செயலாளர்கள் புது டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மா மற்றும் இலங்கைபாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் படைத்தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

பிராந்திய வலய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் கடல்பாதுகாப்பு ஆகியன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆன்டனி, தேசிய பாதுகாப்புஆலோசகர் சிவ் சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோருடன்பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment