Friday, February 10, 2012இலங்கை::முறைப்பாடுகள் கிடைத்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரான அறிக்கையின் அடிப்படையிலேயே மஹியங்கனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 120 பொலிஸாரும் இடம்மாற்றப்பட்டுள்ளனர் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பியான ரவி கருணாநாயக்க கேட்ட குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், மஹியங்கனை பொலிசாருக்கு எதிராக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அறிக்கையின் பிரகாரமே 120 பொலிசாருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
ஒழுக்கம் தொடர்பில் அவசரமாக தீர்மானங்களை எடுக்க முடியாது. நீங்கள் கூறுவதைப் போல அனைவரையும் வீட்டுக்கு அனுப்ப முடியாது முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணைகளை நடத்த வேண்டும். அதன் முதல்படியாக இடமாற்ற வேண்டும்.
இரண்டாவது கட்டமாக வேலையிலிருந்து இடைநிறுத்த வேண்டும். நீங்கள் கூறுவதைப் போல உடனடியாக வீட்டுக்கு அனுப்ப முடியாது, விசாரணையின் அறிக்கையின் பிரகாரம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த விசேட அதிரடிப்படையினருக்கு நாடு தழுவிய ரீதியில் இடமாற்றம்!
விசேட அதிரடிப்படையச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு நாடு தழுவியரீதியில் இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனினால் இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் உயரதிகாரிகளும் ஏனைய கடை நிலைஉத்தியோகத்தர்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
எட்டு ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படஉள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த இடமாற்ற உத்தரவு அமுல்படுத்தப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத குற்றச் செயல்களைகட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரப்படையினர் மாவட்ட ரீதியில் கடமையில்ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment