Pages

Friday, December 2, 2011

சிவில் யுத்தம் நடைபெற்ற காலபகுதியில் போர் குற்றங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்பை ஏற்றுக்கொள்வது அவசியம்-ஜோன் பேர்ட்!

Friday, December 02, 2011
சிவில் யுத்தம் நடைபெற்ற காலபகுதியில், இடம்பெற்றதாக சுமத்தப்பட்டு, பாரதூரமான போர் குற்றங்கள் தொடர்பில், இலங்கை தனது பொறுப்பு கூறும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது அவசியம் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேர்ட் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து, இரண்டு வருட காலம் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களுடன் ஐக்கியத்தை ஏற்படுவது தொடர்பில், அர்த்தமுள்ள முயற்சிகளை காணமுடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுடன் ஐக்கிய கூட்டிணைவு ஒன்று வருவது அத்தியவசியமானது எனவும் கனேடிய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்து, அமைச்சர் ஜோன், ஐக்கிய நாடுகள் சபைக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment