Pages

Friday, December 2, 2011

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ளது!

Friday, December 02, 2011
இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட இந்தக் கப்பலில் இலங்கை, இந்தோனேஷியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் காரணமாக பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுவதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment