Pages

Wednesday, November 30, 2011

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் விவசாயக் கிணறு கையளிப்பு!

Wednesday, November 30, 2011
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினது நிதி ஒதுக்கீட்டின் மூலம் திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதிதாக மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வாழைத்தோட்ட விவசாய மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாண முதலமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் வருகின்ற கிராமிய அபிவிருத்தி எனும் செயற்றிட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கிணறு மற்றும் நீர் இறைக்கும் பம்புகள் முதலமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்ட்டன.

சுமார் 08 விவசாயக் கிணறுகளும் 22 நீர் இறைக்கும் பம்பிகளும் மற்றும் முட் கம்பி பழக் கன்றுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெருகல் பிரதேச சபை உறுப்பினர் திருமதி எஸ் சாந்தமலர் மாகாண விவசாயப்பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், முதலமைச்சர் செயலக திட்டமிடல் பணிப்பாளர், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 விவசாயிகள் மேற்படி விவசாய உபகரணங்களையும் உள்ளீடுகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment