Pages

Tuesday, November 29, 2011

கைதி எஸ்கேப் நோ சான்ஸ் வருது ரோபோ!

Tuesday, November 29, 2011
சியோல் : கைதிகளை கண்காணிக்க விஞ்ஞானிகள் உதவியுடன் ரோபோ ஒன்றை தென்கொரியாவின் பொஹாங் சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. அதிநவீன கேமராக்கள், சென்சார்கள், 4 சக்கரங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. கைதிகளின் வழக்கமான நடவடிக்கைகள் சாப்ட்வேர் உதவியுடன் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை மீறி, எந்த செயலிலாவது கைதிகள் ஈடுபட்டால் ரோபோ உடனே அலாரம் அடிக்கும். இதன்மூலம் கைதிகள் தப்பிப்பது, தற்கொலை முயற்சி, கலாட்டா ஆகியவை குறையும் என்கின்றனர் அதிகாரிகள்.

No comments:

Post a Comment