Pages

Monday, November 28, 2011

டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு: இன்று விசாரணை!

Monday, November 28, 2011
புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான திமுக எம்.பி.யும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி ஜாமீன் மனு குறித்து டெல்லி டெல்லி ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது ஐகோர்ட் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கிவிட்டதாலேயே உங்களுக்கும் நாங்கள் ஜாமீன் வழங்க வேண்டுமா? என்று கனிமொழியின் வழக்கறிஞரிடம் ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இவருடன் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார், முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த் பெகுரா உள்ளிட்ட 5 பேர் ஜாமின் மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment