Pages

Wednesday, November 30, 2011

இந்தியாவில் போலீஸ் மற்றும் கோர்ட் காவலில் 10 ஆண்டில் 14 ஆயிரம் பேர் இறப்பு!-ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது!

Wednesday, November 30, 2011
புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளில், போலீஸ் மற்றும் கோர்ட் காவலில் 14 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என, ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது.

டில்லியில் உள்ள ஆசிய மனித உரிமை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை, 1,504 பேர் போலீஸ் காவலிலும், 12 ஆயிரத்து 727 பேர் கோர்ட் காவலிலும் இறந்துள்ளனர். சிறையில் இழைக்கப்பட்ட கொடுமையின் காரணமாகவே, பெரும்பாலான சாவுகள் நடந்துள்ளன. காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில், ஆறு பேர் மட்டுமே போலீஸ் காவலில் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, போலீஸ் காவலில் கடந்த 90ம் ஆண்டு முதல் 341 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். காஷ்மீரில் லாக்-அப் சாவுகள் பெரிய பிரச்னையாக உள்ளன. மகாராஷ்டிராவில் கடந்த 10 ஆண்டுகளில், 250 பேர் போலீஸ் காவலில் பலியாகியுள்ளனர். சிறையில் காணப்படும் கொடுமைகளும், மனித வாழ்வுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததும், மோசமான மருத்துவ வசதியும், போலீஸ் காவல் மற்றும் கோர்ட் காவலில் ஏற்படும் மரணங்களுக்கு காரணமாகின்றன. இவ்வாறு ஆசிய மனித உரிமை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment