Pages

Thursday, October 6, 2011

தென்கொரிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது!

Thursday, October 06, 2011
தென்கொரிய கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் இன்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பயிற்சி நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த இரண்டு கப்பல்களே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய கூறினார்.

கெங் கம் ச்செங் மற்றும் ச்சுங் ஜீ ஆகிய இந்த இரண்டு கப்பல்களும் நாளை மறுதினம் வரை கொழும்பு துறைகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல்களில் 608 பணியாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment