Pages

Monday, October 3, 2011

இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணுகின்றது – சுமித் கங்குலி!

Monday, October 03, 2011
இந்தியாவை விடவும் சீனாவடன் இலங்கை அதிக உறவுகளைப் பேணி வருவதாக முன்னணி அரசியல் விஞ்ஞானியும், ஆய்வாளருமான டொக்டர் சுமித் கங்குலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரி;த்தானிய ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் டொக்டர் கங்குலி கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை விடவும், சீனாவுடனான உறவுகளை அதிகளவில் வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1980களில் இலங்கையில் அமெரிக்க மேலதிக்கம் நிலவக் கூடும் என பிழையான நிலைப்பாட்டினால், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தமிழ் பிரிவினைவாதத்தை போஷித்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தென் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத பயிற்சியும் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளர்.

எனினும், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதாரத்தில் முன்னணி வகிப்பதற்கு சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தென் இந்திய அரசியல் தலைமைகளின் உதவியை நாட வேண்டியிருப்பதனால், இலங்கை விவகாரம் தொடர்பில் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment