Pages

Saturday, October 8, 2011

இன்று நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலையிட்டு பல வாக்களிப்பு நிலையங்களில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்!

Saturday, October 08, 2011
இன்று நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலையிட்டு பல வாக்களிப்பு நிலையங்களில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என தேர்தல்கள் தொடர்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

பதற்றம் நிறைந்த பகுதிகள் என இனங்காணப்பட்ட பிரதேசங்களிலேயே விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். விசேடமாக, கொலன்னாவ, வெல்லம்பிட்டி,ராஜகிரிய, நுகேகொட, கல்கிஸ்ஸ – தெஹிவளை, அநுராதபுரம், காலி, மாத்தறை உட்பட பல பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலைங்களிலேயே விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அதிகளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment